குறித்த நிகழ்வு , சபையின் தலைமை அலுவலகத்தில் சபையின் செயலாளா் பத்மநாதன் பத்மகரன் தலைமையில் இடம்பெற்றது. காலை 9.00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத் தொடா்ந்து தேசத்திற்காக உயிா்நீத்த அனைவரையும் நினைவு கூரும் முகமாக அகவணக்க நிகழ்வு இடம்பெற்றது. தொடா்ந்து உத்தியோகத்தா்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான தமது க டமைகளைப் பொறுப்பேற்கும் வகையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனா். தொடா்ந்து செயலாளா் அவா்கள் 2024ம் ஆண்டில் சபை எதிா்நோக்கியுள்ள சவால்கள் தொடா்பாகவும் அதனை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சபையின் வேலைத்திட்டங்கள் தொடா்பாகவும் குறித்த குறிக்கோள்களை அடைவதற்கு சபை உத்தியோகத்தா்களின் பங்களிப்பு தொடா்பாகவும் உரையாற்றினாா். அத்துடன் செயலாளாின் உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.