உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் பொது மக்களிடம் இலகுவில் சென்றடையும் நோக்கில் நவீன தொழில்நுட்ப முறைமையை பயன்படுத்தி UNDP-CDLG இன் நிதியின் கீழ் எமது சபைக்கு புதிய இணையத்தளம் உருவாக்க பயிற்சிநெறியில் எமது சபை உத்தியோகத்தர்கள் திரு.எ.வ.டினேஸ் மற்றும் திருமதி ஜெ.ஆன் சுதன்யா ஆகியோர் வடமாகாண உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் நல் வழிகாட்டலின் கீழ் எமது சபையின் செயலாளர் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு வடிவமைக்கப்பட்ட புதிய இணையத்தளங்கள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
எமது சபைக்கு புதிதாக இணையத்தளம் வடிவமைத்த எமது உத்தியோகத்தர்கள் திரு .எ.வ.டினேஸ் மற்றும் திருமதி.ஜெ ஆன் சுதன்யா ஆகியோருக்கு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர் வரதீஸ்வரன் அவர்களினால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற இணையத்தளம் வடிவமைத்த உத்தியோகத்தர்கள், UNDP அமைப்பின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.