கிளிநொச்சி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

கிளிநொச்சி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் 30.01.2025 அன்று சபையின் மாநாட்டு மண்டபத்தில் சபையின் செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவின் பிரதம விருந்தினராக திரு.பா.சத்தியராகவன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கிளிநொச்சி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யோ.கௌதமன் பல் வைத்திய நிபுணர் இராணுவ ஆதார வைத்தியசாலை கிளிநொச்சி மற்றும் திரு.கா.சண்முகதாசன் முன்னைநாள் செயலாளர் கரைச்சி பிரதேச பிரதேச சபை மற்றும் திருமதி.கி.சிவதர்சினி அதிபர் கிளி/ சிவநகர் அ.த.க.பாடசாலை அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.வளவை வளவன் மா.செல்லத்தம்பி மூத்த எழுத்தாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் இவ் விழாவில் உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடாத்தினார்கள்.

 

                 

 

கேள்வி கோரல்

கரைச்சி பிரதேச சபை வளாகக் கடைத்தொகுதிகளான ஸ்கந்தபுரம் சந்தை மற்றும் ஆனைவிழுந்தான் குளம் சந்தையில் அமைந்துள்ள கடைகளினை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி மற்றும் மீள் கேள்வி கோரல்.  

வீதிப் பலகைகள் நிறுவுதல்

கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பெயரிடப்படாத வீதிகளிற்கு பொது மக்களின் இடரினைக் கருத்தில் கொண்டு எமது சபையின் செயலாளரின் தலைமையின் கீழ் வீதிப்பலகைகள் நிறுவும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.    

 

புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு – 2025

2025 ம் வருடத்திற்கான முதல் நாள் கடமைகளை அரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு சபையின் செயலாளர் திரு செ.செல்வகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

உத்தியோகத்தர்கள் அனைவரும் தூய்மையான இலங்கை (clean Srilanka) திட்டத்துடன் இணைக்கப்பட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.  

 

               

 

வட்டக்கச்சி பொது நூலக தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட வட்டக்கச்சி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வானது 18.12.2024 அன்று சபையின் செயலாளர் திரு.செ.செல்வகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது.