கிளிநொச்சி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் 30.01.2025 அன்று சபையின் மாநாட்டு மண்டபத்தில் சபையின் செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவின் பிரதம விருந்தினராக திரு.பா.சத்தியராகவன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கிளிநொச்சி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யோ.கௌதமன் பல் வைத்திய நிபுணர் இராணுவ ஆதார வைத்தியசாலை கிளிநொச்சி மற்றும் திரு.கா.சண்முகதாசன் முன்னைநாள் செயலாளர் கரைச்சி பிரதேச பிரதேச சபை மற்றும் திருமதி.கி.சிவதர்சினி அதிபர் கிளி/ சிவநகர் அ.த.க.பாடசாலை அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.வளவை வளவன் மா.செல்லத்தம்பி மூத்த எழுத்தாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் இவ் விழாவில் உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடாத்தினார்கள்.