கரைச்சி பிரதேச சபையின் வட்டக்கச்சி பொது நூலகத்தில் தேசிய ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரனையுடன் அமைக்கப்பட்ட இலத்திரனியல் நூலகம் 31.10.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வாசகர் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் தேசிய ஆவணவாக்கல் சேவைகள் சபையின்பிரதிப் பணிப்பாளர் , வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் , உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிளிநொச்சி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வாசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இராமநாதபுரம் மேற்கு அ.த.க. பாடசாலையில் தேசியவாசிப்பு மாத நிகழ்வும் தங்க திருமேனி நூல் வெளியீட்டு விழாவும், தரம் உயர்த்தப்பட்ட நூலகங்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டக்கச்சி பொது நூலகம் டியிற்றல் நூலகமாக தரம் உயர்த்தப்பட்டசான்றிதழ் தேசிய ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வழங்கி வைக்கப்பட்டது.