எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமைப்பூங்கா உபஅலுவலகம் ( கிளிநொச்சி) சுகாதார பணியாளர்களால் துப்பரவு செய்யப்பட்டது.
எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமைப்பூங்கா உபஅலுவலகம் ( கிளிநொச்சி) சுகாதார பணியாளர்களால் துப்பரவு செய்யப்பட்டது.
எமது சபையின் கனரக வாகனங்களின் மூலமும், மக்களின் கிரவல் பங்களிப்புடனும் செயலாளரின் வழிகாட்டலுடனும் மருதநகர் சுந்தரலிங்கம் வீதி திருத்த வேலைகள் இடம்பெற்றன.
கிளி/ சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் கிளிநொச்சி பொது நூலகத்தால் நூலக நடமாடும் சேவை 30.11.2023 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நடமாடும் சேவை 15 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும்.
எமது சபையினுடைய தீயணைப்பு வாகனம் கடந்த சில நாட்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் எமது சேவையை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாது இருந்தது தற்போது வாகனம் சீர் செய்யப்பட்டு 02.03.2024 இல் இருந்து சபையின் தொடர் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்காக, தீயணைப்பு சேவையின் தொலைபேசி இலக்கம் – 0212283333
உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் பொது மக்களிடம் இலகுவில் சென்றடையும் நோக்கில் நவீன தொழில்நுட்ப முறைமையை பயன்படுத்தி UNDP-CDLG இன் நிதியின் கீழ் எமது சபைக்கு புதிய இணையத்தளம் உருவாக்க பயிற்சிநெறியில் எமது சபை உத்தியோகத்தர்கள் திரு.எ.வ.டினேஸ் மற்றும் திருமதி ஜெ.ஆன் சுதன்யா ஆகியோர் வடமாகாண உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் நல் வழிகாட்டலின் கீழ் எமது சபையின் செயலாளர் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு வடிவமைக்கப்பட்ட புதிய இணையத்தளங்கள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
எமது சபைக்கு புதிதாக இணையத்தளம் வடிவமைத்த எமது உத்தியோகத்தர்கள் திரு .எ.வ.டினேஸ் மற்றும் திருமதி.ஜெ ஆன் சுதன்யா ஆகியோருக்கு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர் வரதீஸ்வரன் அவர்களினால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற இணையத்தளம் வடிவமைத்த உத்தியோகத்தர்கள், UNDP அமைப்பின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கரைச்சி பிரதேச சபையின் வட்டக்கச்சி பொது நூலகத்தில் தேசிய ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரனையுடன் அமைக்கப்பட்ட இலத்திரனியல் நூலகம் 31.10.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வாசகர் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் தேசிய ஆவணவாக்கல் சேவைகள் சபையின்பிரதிப் பணிப்பாளர் , வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் , உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிளிநொச்சி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வாசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இராமநாதபுரம் மேற்கு அ.த.க. பாடசாலையில் தேசியவாசிப்பு மாத நிகழ்வும் தங்க திருமேனி நூல் வெளியீட்டு விழாவும், தரம் உயர்த்தப்பட்ட நூலகங்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டக்கச்சி பொது நூலகம் டியிற்றல் நூலகமாக தரம் உயர்த்தப்பட்டசான்றிதழ் தேசிய ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வழங்கி வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் (07.01.2024) எமது சபை , கிளிநொச்சி சுகாதார பணிமனை உத்தியோகத்தா்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தா்கள் இணைந்து
குறித்த நிகழ்வு , சபையின் தலைமை அலுவலகத்தில் சபையின் செயலாளா் பத்மநாதன் பத்மகரன் தலைமையில் இடம்பெற்றது. காலை 9.00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத் தொடா்ந்து தேசத்திற்காக உயிா்நீத்த அனைவரையும் நினைவு கூரும் முகமாக அகவணக்க நிகழ்வு இடம்பெற்றது. தொடா்ந்து உத்தியோகத்தா்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான தமது க டமைகளைப் பொறுப்பேற்கும் வகையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனா். தொடா்ந்து செயலாளா் அவா்கள் 2024ம் ஆண்டில் சபை எதிா்நோக்கியுள்ள சவால்கள் தொடா்பாகவும் அதனை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சபையின் வேலைத்திட்டங்கள் தொடா்பாகவும் குறித்த குறிக்கோள்களை அடைவதற்கு சபை உத்தியோகத்தா்களின் பங்களிப்பு தொடா்பாகவும் உரையாற்றினாா். அத்துடன் செயலாளாின் உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
குறித்த நிகழ்வானது தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் முகமாக கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் நிதி உதவியுடன் இந் நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக எமது மாவட்டத்தின்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார் இலங்கையில் உள்ள அனைத்து பாகங்களிலும் தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மூலமாக பற்பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.